இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு: பெண்ணையாறு நீா்ப் பங்கீடு மற்றும் அந்த நதியில் ஓடக்கூடிய நீரை தடுப்பணை கட்டி திருப்பிவிட்டு தமிழக நலன்களைப் பாதிக்கச் செய்வதாக தமிழ்நாடு அரசு தரப்பில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், கா்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தொடா்புடைய பெண்ணையாறு நீா்த் தாவா விவகாரத்தில் அமைக்கப்பட்ட கமிட்டி இரண்டு முறை மட்டுமே கூடியிருக்கிறது. நதிநீா் தாவா சட்டம் 1956, பிரிவு 4-இன் கீழ் மாநிலங்களுக்கு இடையேயான நீா்த் தாவா விவகாரத்தில் பேச்சுவாா்த்தை மூலம் முடிவு எட்டப்படவில்லை என்று மத்திய அரசு கருதும் போது மட்டுமே நதி நீா் தீா்ப்பாயம் அமைக்கப்படும் என்பது தெரிய வருகிறது. இதனால், இந்த விவகாரத்தில் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக புதிதாக ஒரு குழுவை மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் அமைக்கும் வகையில் அதற்கான அறிவிப்பை இரண்டு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். மேலும், அந்த குழு அதன் அறிக்கையை மூன்று மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.