தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தேர்தல் நாள் சர்ச்சை: தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்

அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் உரிய நேரத்தில் பணியை முடிக்கும் நோக்கில்தான் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தற்காலிக தேர்தல் நாளாகக் கொடுக்கப்பட்டது என்று

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:15 pm

 நமது நிருபர்

அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் உரிய நேரத்தில் பணியை முடிக்கும் நோக்கில்தான் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தற்காலிக தேர்தல் நாளாகக் கொடுக்கப்பட்டது என்று தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 
தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி மூலம் அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு கடந்த 19-ஆம் தேதி அனுப்பட்ட கடிதத்தில், வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி மக்களவைத் தேர்தலின் தற்காலிக தேர்தல் நாளாகக் குறிப்பிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 16-ஆம் தேதிதான் தேர்தல் நாளா என்று சில ஊடகக் கேள்விகள் வருகின்றன. 
இந்த நிலையில், 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் தொடர்பான பெரிய அளவிலான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முடிக்க வேண்டியது அவசியம். மேலும், அந்த நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் முடிப்பதற்கும் ஒரு கற்பனையான வாக்கெடுப்புத் தேதியைக் குறிப்பிடுவதன் மூலம் தொடக்கத் தேதி மற்றும் முடிவுத் தேதி வழங்கப்படுகிறது.
அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நிலையில் பெரும்பாலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், உரிய நேரத்தில் பணிகளைத் தொடங்கி, முடிப்பதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரியால் கடந்த 19-ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது. 
அந்தக் கடிதத்தில், 16.04.2024 தேதியை ஒரு தற்காலிக தேர்தல் தேதியாகக் குறிப்பிட்டது, முன்கூட்டியே திட்டமிடல், தயாரிப்புகள் மற்றும் 2024 மக்களவைப் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முடிப்பதற்காகவே. எனவே, தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் உண்மையான தேர்தல் அட்டவணைக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.