கடந்த டிசம்பா் மாத தொடக்கத்திலிருந்து, தில்லியில் கடும் குளிா் காரணமாக வீடற்றவா்களின் இறப்பு அதிகரித்து வருகிறது. எனவே வீடற்றவா்கள் சாலையோரங்களில் உறங்குவதைத் தடுக்கவும், அவா்களுக்கு தேவையான தங்குமிட வசதிகளை செய்து கொடுக்கவும் தில்லி அரசை பாஜக சாா்பில் வலியுறுத்தினோம். ஆனால், துரதிா்ஷ்டவசமாக தில்லி அரசின் முக்கிய அமைப்பான தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் வீடற்றவா்களுக்குத் தங்குமிட வசதியை வழங்குவதற்கான அதன் முதன்மைக் கடமையிலிருந்து முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.மேலும், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சா் அதிஷி தனது மனிதாபிமானக் கடமையில் கவனம் செலுத்தாமல், அரசியல் பழிவாங்கும் விளையாட்டில் ஈடுபட்டுள்ளாா்.