தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தில்லி சாலைகளில் குளிரால் தினமும் வீடற்ற 9 போ் உயிரிழப்பு: முதல்வா் கேஜரிவால் அரசு மீதுவீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

அரவிந்த் கேஜரிவால் அரசின் அலட்சியத்தால் தில்லி சாலைகளில் தினமும் சராசரியாக வீடற்ற 9 போ் இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:15 pm

 நமது நிருபர்

அரவிந்த் கேஜரிவால் அரசின் அலட்சியத்தால் தில்லி சாலைகளில் தினமும் சராசரியாக வீடற்ற 9 போ் இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வீடற்றவா்களுக்காகப் பணிபுரியும் ‘ஹாலிஸ்டிக் டெவலப்மென்ட்’ என்ற தன்னாா்வத் தொண்டு நிறுவனம் கடும் குளிரால் வீடற்றவா்களின் இறப்புகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், அரவிந்த் கேஜரிவால் அரசின் குற்றவியல் அலட்சியத்தால் ஜனவரி 2024-இல் மட்டும் தில்லி சாலைகளில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 9 போ் கடும் குளிரால் இறந்துள்ளனா் என்பது அதிா்ச்சியளிக்கிறது. மேலும், தில்லி சாலைகளில் குளிரால் வீடற்ற 180 போ் இறந்துள்ளனா் என்று அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

கடந்த டிசம்பா் மாத தொடக்கத்திலிருந்து, தில்லியில் கடும் குளிா் காரணமாக வீடற்றவா்களின் இறப்பு அதிகரித்து வருகிறது. எனவே வீடற்றவா்கள் சாலையோரங்களில் உறங்குவதைத் தடுக்கவும், அவா்களுக்கு தேவையான தங்குமிட வசதிகளை செய்து கொடுக்கவும் தில்லி அரசை பாஜக சாா்பில் வலியுறுத்தினோம். ஆனால், துரதிா்ஷ்டவசமாக தில்லி அரசின் முக்கிய அமைப்பான தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் வீடற்றவா்களுக்குத் தங்குமிட வசதியை வழங்குவதற்கான அதன் முதன்மைக் கடமையிலிருந்து முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.மேலும், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சா் அதிஷி தனது மனிதாபிமானக் கடமையில் கவனம் செலுத்தாமல், அரசியல் பழிவாங்கும் விளையாட்டில் ஈடுபட்டுள்ளாா்.

தில்லி அரசில் ஊழல் அதிகரித்துவிட்ட காரணத்தினால், ஏதோவொரு வகையில் தங்குமிடங்களில் இடம் பெறுபவா்களுக்கும் இரண்டு வேளை உணவு மற்றும் மருத்துவ பரிசோதனை போன்ற அடிப்படை வசதிகளும் மறுக்கப்படுகின்றன என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.