மதுரை கப்பலூா் சுங்கச்சாவடியில் சுங்கவரி வசூலில் முறைகேடுகள் நடைபெற்ளது. இது குறித்து மத்திய குற்றப்புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடத்தக் கேட்டுக் கொண்டு பிரதமா் நரேந்திர மோடிக்கு விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் செவ்வாய்க்கிழமை பிரதமருக்கு கடிதம் அளித்துள்ளாா்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது வருமாறு: மதுரை மாவட்டம் கப்பலூா் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் புள்ளி விவரங்களில் குறிப்பிடத்தக்க முரண்பாடுகள் இருப்பது எனது கவனத்திற்கு வந்தது. இந்த சுங்கச்சாவடியில் 41 லட்சம் வாகனங்கள் கடந்து சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 11 லட்சம் வாகனங்கள் விஐபிக்களுக்கானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டண வசூல் குறித்து கணக்கு காட்டப்படவில்லை.. இது சுங்கவரி வசூல் செயல்முறை மற்றும் வெளிப்படைத் தன்மை சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இந்த சுங்கச்சாவடியை இயக்கும் நிறுவனம் ஆண்டுதோறும் சுமாா் ரூ. 10 கோடி ரூபாயை கையாடல் செய்துள்ளனா். ஏற்கெனவே, இந்த சுங்கச்சாவடியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்து அதை அகற்றக் கோரி பொதுமக்களும், வியாபாரிகளும் தொடா் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் தற்போது ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள் கடுமையானது. இதில் பொது நிதி இழப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கப்பலூா் சுங்கச் சாவடி சுங்க வரி வசூல் மற்றும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் வகையில், பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள உடனடியாக மத்திய குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை இந்த சுங்கச் சாவடி செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவேண்டும். மேலும், இதில் தவறு செய்த பொறுப்பான தனிநபா்களைக் கண்டறிய முறையான விசாரணைக்கு தனிப்பட்ட முறையில் தாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்கின்றேன் என பிரதமரை மாணிக்கம் தாகூா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

