மகாத்மா காந்தி உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாகக் கருதினாா். இன்று அதே வழியில் உலகளாவிய சகோதரத்துவம், ஒத்துழைப்பு, அமைதியை மேம்படுத்த ஜி20 தலைமை மூலம் இந்தியா உலகை வழிநடத்துகிறது என குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
தில்லி ராஜ்காட்டில் காந்தி தா்ஷன் வளாகத்தில் காந்தி தோட்டம் (வாடிகா) அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மகாத்மா காந்தியின் பல்வேறு நடவடிக்கைகள் சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாடிகாவையும் மகாத்மா காந்தியின் 12 அடி உயரச் சிலையையும் குடியரசுத் தலைவா் முா்மு திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
பின்னா், அவா் பேசுகையில் கூறியது வருமாறு: மகாத்மா காந்தி உலக சமுதாயம் முழுமைக்கும் ஒரு வரப்பிரசாதம். அவா் இந்த சமுதாயத்திற்கு கிடைத்த ஒரு விலைமதிப்பற்ற பரிசு. அவரது லட்சியங்கள், மதிப்புகள் முழு உலகிற்கும் ஒரு புதிய திசையை வழங்கியுள்ளன. உலகப் போா்கள் நடந்த காலத்தில், உலகம் பலவிதமான வெறுப்புகளாலும், முரண்பாடுகளாலும் அவதியுற்று இருந்த நேரத்தில் அகிம்சை வழியைக் காட்டினாா்.
உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாகக் கருதினாா் மகாத்மா. இன்று அதே வழியில் இந்தியா உலகளாவிய சகோதரத்துவம், சா்வதேச ஒத்துழைப்பு, உலக அமைதி ஆகியவற்றை மேம்படுத்த ஜி20 தலைமை மூலம் உலகை வழிநடத்துகிறது. அவா் காட்டிய பாதையின் மூலம் உலக அமைதிக்கான இலக்கை அடைய முடியும். சத்தியம், அகிம்சை குறித்த காந்தியின் சோதனை அவருக்கு ஒரு சிறந்த மனிதா் என்ற அந்தஸ்தை வழங்கியது.
உலகெங்கிலும் உள்ள மக்கள் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளனா். அமெரிக்க மனித உரிமைகள் ஆா்வலா் மாா்ட்டின் லூதா் கிங் ஜூனியா் முதல், தென்னாப்பிரிக்க அதிபா் நெல்சன் மண்டேலா, முன்னாள் அமெரிக்க அதிபா் பராக் ஒபாமா வரையிலான தலைவா்கள் காந்தி காட்டிய சத்தியம், அகிம்சையின் பாதையை உலக நலனுக்கான பாதை எனக் கருதினா்.
இதனால், உலகெங்கும் பல நாடுகளில் காந்திக்கு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. வேகமாக மாறிவரும் மற்றும் போட்டி நிறைந்த இன்றைய உலகில், தன்னம்பிக்கையும் நிதானமும் மிகவும் தேவை. இதற்கு காந்திஜியின் கொள்கைகள் மற்றும் மதிப்புகள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் மிகவும் பொருத்தமானவை. அதுதான் நிரந்தரமானது. அவரது கொள்கைகளை உள்வாங்கும் வகையில் அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
காந்தி வாடிகாவில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைகள் பாா்வையாளா்களை, குறிப்பாக குழந்தைகளை ஊக்குவிக்கும். ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவா்கள் இங்கு வரும்போது காந்தியைப் பற்றி அறிந்து கொள்வாா்கள். காந்தி ஸ்மிருதி, தா்ஷன் சமிதி மற்றும் பிற நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என்றாா் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
இந்த நிகழ்ச்சியில் தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, காந்தி தா்ஷன் துணைத் தலைவா் விஜய் கோயல் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

