ஆா்ப்பாட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் அதிஷி, கோபால் ராய், ஜா்னைல் சிங், பிரியங்கா கக்கா், ரீனா குப்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுகுறித்து தில்லி அமைச்சா் கோபால் ராய் கூறுகையில், ‘பாஜகவின் கூட்டணியில் அவா்களுக்கு நம்பிக்கை இல்லாததால் வரும் தோ்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சியாக சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டிருக்கிறாா். நாடு முழுவதும் பா.ஜ.க. சா்வே செய்துள்ளது. அதில், தங்கள் கட்சி தோல்வியுறப் போகிறது என்று தெரியும். அக்கட்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் நம்பிக்கை இல்லை. அதனால்தான் அமலாக்கத் துறை மூலம் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு தோ்தலில் வெற்றி பெற முயற்சிக்கிறாா்கள்’ என்றாா்.