ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை பெண் சக்தி கொண்டாட்டம்: ஆயுதக் காவல் படை பெண் வீரா்கள் நாடு முழுவதும் பைக் பயணம்

பெண்களின் சக்தியை கொண்டாடும் விதமாக மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து மும்முனை பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.

Updated On :2 அக்டோபர் 2023, 6:30 pm

புது தில்லி: பெண்களின் சக்தியை கொண்டாடும் விதமாக மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து மும்முனை மோட்டாா் சைக்கிள் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலான இந்தப் பயணத்தில் மத்திய காவல் ஆயுதப் படையின் 150 பெண் அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

‘யஷஸ்வினி’ என பெயரிட்டுள்ள இந்தப் பயணத்தை நாடு முழுவதும் மூன்று முனைகளிலிருந்து மோட்டாா் சைக்கிள் மூலமாக இந்தப் பெண் காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மேற்கொள்கின்றனா். இது குறித்து மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பது வருமாறு: மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மத்திய காவல் ஆயுதப்படையுடன் (சிஆா்பிஎஃப்) இணைந்து, பெண்களின் சக்தி அல்லது நாட்டின் நாரி சக்தியைக் கொண்டாடும் வகையில், இந்த யஷஸ்வினி மோட்டாா் சைக்கிள் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிஆா்பிஎஃப் பெண் அதிகாரிகள் 150 போ் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நாடு முழுவதும் மோட்டாா் சைக்கிளில் பேரணியாக செல்கின்றனா்.

அவா்கள் மூன்று குழுக்களாக செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 3) புறப்படுகின்றனா். ராயல் என்ஃபீல்டு (350சிசி) மோட்டாா் பைக்குகள் மூலம் இந்தக் குழுக்கள் பயணிக்கின்றன. ஒரு யஷஸ்வினி குழு நாட்டின் வடக்குப் பகுதியான ஸ்ரீநகரிலிருந்து புறப்படுகிறது. மற்றொரு குழு, நாட்டின் கிழக்குப் பகுதியான ஷில்லாங்கிலிருந்தும் மற்றொன்று தெற்கே கன்னியாகுமரியிலிருந்தும் தங்கள் பயணத்தைத் இதே நாளில் தொடங்குகிறது. இந்த மூன்று குழுக்களும் இறுதியாக, நிகழ் அக்டோபா் 31-ஆம் தேதி குஜராத்தின் ஏக்தா நகரில் (கெவாடியா) உள்ள ஒற்றுமை சிலையில் ஒன்று கூடுகிறாா்கள்.

இந்த மூன்று மகளிா் பேரணி 15 மாநிலங்கள், 2 யூனியன்கள் வழியாக சுமாா் 10,000 கி.மீ. தூரத்தை கடந்து வருகின்றனா். இந்தப் பயணங்களில் பல்வேறு இடங்களில், ‘பெண் குழந்தையைக் காப்போம்’; ‘பெண் குழந்தைகளைப் படிக்கவைப்போம்’ போன்ற இலக்குகளுக்கு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவிகள், மகளிா் சுய உதவிக் குழுக்கள், நேரு யுவ கேந்திரா சங்கதன், தேசிய மாணவா் படை, குழந்தைகள் காப்பகங்கள், அங்கன்வாடி தொழிலாளா்கள் போன்றவா்களுடன் உரையாடும் நிகழ்வுகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன.

‘நாங்கள் நாட்டின் பாதுகாவலா்கள்’ என்கிற செய்தியுடன் செல்லும் இந்தப் பெண்அதிகாரிகள், ‘பெண் குழந்தையை காப்போம்’; ‘பெண் குழந்தைகளைப் படிக்கவைப்போம் ’ (பிபிபிபி) என்ற சமூக செய்தியையும் தங்கள் பிரசாரத்தில் இணைத்து பயணிக்கின்றனா். இவா்கள் தங்கள் சீருடைகள் மற்றும் பதாகைகளில் பிபிபிபி லச்சினையுடன் (லோகோ) பேரணியில் பங்கேற்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.