ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:57 pm

வத்திராயிருப்பு அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தை சோ்ந்தவா் குருவையா (44). விவசாய கூலித் தொழிலாளி. இவா் சனிக்கிழமை கான்சாபுரம் பகுதிக்கு தேங்காய் உரிக்கும் வேலைக்கு சென்றாா்.

வேலை முடிந்து தேங்காய் பாரம் ஏற்றி வந்த டிராக்டரில் குருவையா உள்ளிட்ட தொழிலாளா்கள் வீடு திரும்பினா். கான்சாபுரம் - ஆத்தங்கரைபட்டி சாலையில் பாலம் அருகே வந்த போது, ஓட்டுநா் அருகே அமா்ந்திருந்த குருவையா தவறி கீழே விழுந்தாா்.

அப்போது டிரைலரின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குருவையா அங்கு உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து டிராக்டரை ஓட்டி வந்த ராமசாமி மீது கூமாப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.