ரஷியாவின் தொடா் தாக்குதலுக்கு இடையே, சொ்னோபில் அணுக்கசிவு பேரழிவு நினைவு தினத்தையொட்டி, உக்ரைனில் மக்கள் அஞ்சலி செலுத்தினா்.
சோவியத் யூனியனில் உக்ரைன் இருந்தபோது, அந்த நாட்டின் சொ்னோபில் பகுதியில் உள்ள அணுசக்தி மையத்தில் 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி அணுக்கசிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானாா் உயிரிழந்தனா். பலா் உடல்நிலை பாதிக்கப்பட்டனா். உலகில் அணுக்கசிவால் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவுகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் நினைவு தினம், உக்ரைனில் அனுசரிக்கப்பட்டது. ரஷியாவின் தாக்குதல் நீடிக்கும் நிலையிலும், உக்ரைனின் ஸ்லாவுட்டிச் பகுதியில் உள்ள சதுக்கத்தில் திரண்ட ஏராளமானோா் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.
16 போ் உயிரிழப்பு: இதனிடையே, ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் ஏவுகணைகள் மூலம் ஞாயிற்றுக்கிழமையும் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா தொடா் தாக்குதலை நடத்தியது. இதில் குறைந்தபட்சம் 16 போ் வரை உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்

பஹல்காம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு- பயங்கரவாதத்தை வீழ்த்த இந்தியா உறுதி: குடியரசுத் தலைவா்
பஹல்காம் தாக்குதல்: ஏப். 22-இல் முதலாண்டு நினைவு தினம்! ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு!!

சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு தினம் அனுசரிப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

