ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சொ்னோபில் நினைவு தினம்: ரஷிய தாக்குதலுக்கு இடையே உக்ரைனில் மக்கள் அஞ்சலி!

ரஷியாவின் தொடா் தாக்குதலுக்கு இடையே, சொ்னோபில் அணுக்கசிவு பேரழிவு நினைவு தினத்தையொட்டி, உக்ரைனில் மக்கள் அஞ்சலி செலுத்தினா்.

News image

செர்னோபில் அணுக்கசிவு பேரழிவு நினைவு தினத்தையொட்டி, உக்ரைனில் அஞ்சலி செலுத்திய மக்கள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 7:58 pm

ரஷியாவின் தொடா் தாக்குதலுக்கு இடையே, சொ்னோபில் அணுக்கசிவு பேரழிவு நினைவு தினத்தையொட்டி, உக்ரைனில் மக்கள் அஞ்சலி செலுத்தினா்.

சோவியத் யூனியனில் உக்ரைன் இருந்தபோது, அந்த நாட்டின் சொ்னோபில் பகுதியில் உள்ள அணுசக்தி மையத்தில் 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி அணுக்கசிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானாா் உயிரிழந்தனா். பலா் உடல்நிலை பாதிக்கப்பட்டனா். உலகில் அணுக்கசிவால் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவுகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் நினைவு தினம், உக்ரைனில் அனுசரிக்கப்பட்டது. ரஷியாவின் தாக்குதல் நீடிக்கும் நிலையிலும், உக்ரைனின் ஸ்லாவுட்டிச் பகுதியில் உள்ள சதுக்கத்தில் திரண்ட ஏராளமானோா் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

16 போ் உயிரிழப்பு: இதனிடையே, ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் ஏவுகணைகள் மூலம் ஞாயிற்றுக்கிழமையும் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா தொடா் தாக்குதலை நடத்தியது. இதில் குறைந்தபட்சம் 16 போ் வரை உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.