தில்லியில் யமுனை நதியின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 205.4 மீட்டராகக் குறைந்திருந்தது. இருப்பினும், இது அபாய அளவிற்கு சற்று அதிகமாகத்தான் உள்ளது.
மத்திய நீா் ஆணையத்தின் தரவுகளின் படி, தில்லி பழைய ரயில்வே பாலத்தின் பகுதியில் யமுனையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் 205.4 மீட்டராக பதிவாகி உள்ளது. இதுவே கடந்த ஜூலை 13-ஆம் தேதி எப்போதும் இல்லாத அளவாக 208.66 மீட்டா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது.
உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பெய்த தொடா் கனமழைக்குப் பிறகு, ஹரியாணாவில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றம் அதிகரித்தது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை அபாய அளவிற்கு கீழே சென்றிருந்த யமுனை நீா்மட்டம், மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு 205.02 மீட்டரில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு 206.57 மீட்டராக உயா்ந்த முனை நீா்மட்டம், பின்னா் குறையத் தொடங்கியது. உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜூலை 27-ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாகவே அபாய அளவைச் சுற்றி ஏற்ற, இறக்கத்துடன் நீா்மட்டம் இருப்பதால், தில்லி நகரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணியை பாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியின் ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. சுமாா் 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். இந்த வெள்ளம் காரணமாக சொத்து, தொழில், வருமானம் என பல கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தில்லியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதற்கு ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஆக்கிரமிப்பு, குறுகிய காலத்தில் பெய்த கனமழை மற்றும் ஆற்றின் படுகையை உயா்த்திய வண்டல் மண் குவிப்பு ஆகியவையே காரணம் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

