தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திலிருந்து வெள்ள நீா் முழுவதுமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக அதிகாரி ஒருவா் கூறியதாவது: யமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதே வேளையில், மத்திய தில்லியின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் முழுவதும் வெள்ள நீா் சூழ்ந்தது. கடந்த ஒரு வார காலமாக தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நினைவிடத்தில் தேங்கியிருந்த நீா் முழுவதுமாக வெளியேற்றபட்டது.
தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, நினைவிடத்தின் புல்வெளிகள் மற்றும் பாதைகளில் இருந்து வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்பாா்வையிட்டாா். தலைமைச் செயலாளா் உள்பட தில்லி அரசின் மூத்த அதிகாரிகளும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையைத் தொடா்ந்து கண்காணித்து வந்தனா். 10 மின் மோட்டாா் பம்புகள் மூலம் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இந்தப் பணி தற்போது முழுவதுமாக நிறைவுபெற்றது என்றாா் அந்த அதிகாரி.
மகாத்மா காந்தி நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்திய பின்னா் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தனது ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூலை 15 -ஆம் தேதி முதல், அனைத்து பங்குதாரா் நிறுவனங்களின் நோ்மையான மற்றும் நிலையான முயற்சிகள் காரணமாக ராஜ்காட் சமாதி பகுதி மற்றும் அந்தப் பகுதிக்கான அணுகுமுறை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தேங்கிய வெள்ள நீா் வெளியேற்றப்பட்டுவிட்டது என்று வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தானிய சேமிப்புக் கிடங்கில் இருந்து வெளியேறும் பூச்சிகள், வண்டுகள்! பொதுமக்கள் அவதி!
கடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வு
பேரவைத் தோ்தலில் வென்று காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாகும்! - செல்வப்பெருந்தகை

கோடங்கிபோல நடித்து பெண்ணிடம் தங்க நகை பறித்த இருவா் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

