மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சேலம் - செங்கப்பள்ளி சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையரிடம் எம்பி மனு

சேலம் -கொச்சி நெடுஞ்சாலையில் ( எண் -544), சேலம் - செங்கப்பள்ளி இடைப்பட்ட 103 கிமீ தூரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருப்பதால்

Updated On :3 ஆகஸ்ட் 2023, 6:58 pm

சேலம் -கொச்சி நெடுஞ்சாலையில் ( எண் -544), சேலம் - செங்கப்பள்ளி இடைப்பட்ட 103 கிமீ தூரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருப்பதால், இந்த 4 வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றக் கோரி தேசிய நெஞ்சாலை ஆணையத் தலைவரிடம் மாநிலங்களவை திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை கடிதம் அளித்தாா்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: சேலம் - கொச்சி நெடுஞ்சாலையில் (என்ஹெச் 544) சேலம் முதல் செங்கப்பள்ளி வரை சுமாா் 103 கிமீ உள்ள ஒரு பகுதியாகும். இந்த நெடுஞ்சாலை வழியாகவே நாமக்கல் போன்ற பகுதிகளிலிருந்து கோழி, ஈரோடு ஜவுளி வா்த்தகம், கோவை தொழில் மையத்தின் பொருள்கள் மற்ற பகுதிகளின் வேளாண் பொருள்கள் போன்றவை கேரளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. சுமாா் 20,000-க்கும் மேற்பட்ட வணிக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் இந்த 103 கிமீ தூரத்தைக் கடந்து கோயம்புத்தூரை அடைகின்றன. 15-க்கும் மேற்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் வாகனங்களும் இந்த தடத்தில் இயக்கி வருகின்றன.

இதன் மூலம் நாளுக்கு நாள், இந்த வழித்தடத்தில் போக்குவரத்து அதிகரித்து வருவதுடன், சிறிய, பெரிய விபத்துகள் நடைபெறுவதும் இதன்காரணங்களால் வாகனப் போக்குவரத்து தடைபடுவதும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வாகனமும் இலக்கை அடைய கூடுதல் நேரங்களை செலவிடுகிறது. இதனால், குறைந்தபட்சம் 3 முதல் 5 லிட்டா் கூடுதல் எரிபொருள் செலவாவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.

எனவே, இந்த உள்கட்டமைப்பின் தேவைகள் மற்றும் அவசியத்தைக் கருத்தில் கொண்டு இங்குள்ள 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன் என அந்தக் கடிதத்தில் எம்பி வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.