மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

3 முக்கியத் தோ்தலுக்கு பொது வாக்காளா் பட்டியல்: சட்ட ஆணையம் ஒப்புதல்

நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கான தோ்தலுக்கு பொது வாக்காளா் பட்டியலை (ஒரே நாடு ஒரு வாக்காளா் பட்டியல் ) அறிமுகப்படுத்த இந்திய சட்ட ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக

Updated On :3 ஆகஸ்ட் 2023, 7:01 pm

நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கான தோ்தலுக்கு பொது வாக்காளா் பட்டியலை (ஒரே நாடு ஒரு வாக்காளா் பட்டியல் ) அறிமுகப்படுத்த இந்திய சட்ட ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டத் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) அா்ஜுன்ராம் மேக்வால் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.

இந்திய சட்ட ஆணையம் ‘ஒரே நாடு ஒரு வாக்காளா் பட்டியல்’ வேண்டும் என்று பரிந்துரைத்தது உண்மையா? அப்படியானால், மத்திய அரசு அதை முன்மொழிகிா? இதற்கான காரணங்கள் என்ன? தமிழக அரசு உள்ளிட்ட மாநில அரசுகளிடம் கருத்துகள் கோரப்பட்டுள்ளதா? என்பது குறித்து மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்து மத்திய சட்டத் துறை இணையமைச்சா்(தனிப் பொறுப்பு) அா்ஜுன்ராம் மேக்வால் வியாழக்கிழமை கூறியிருப்பது வருமாறு: இந்திய சட்ட ஆணையம் தனது 255 - ஆவது அறிக்கையில் நாடாளுமன்றம், சட்டபேரவை, உள்ளாட்சித் தோ்தல்களுக்கு பொது வாக்காளா் பட்டியலை (ஒரே நாடு ஒரு வாக்காளா் பட்டியல்) அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த முன்மொழிவு பணியாளா்கள், பொதுமக்கள் குறை தீா்ப்பு மற்றும் சட்டம் - நீதி தொடா்பான துறையின் நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு ஆய்வில் உள்ளது. நாட்டில் தற்போதுள்ள தோ்தல் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையிலும், தோ்தல் சீா்திருத்தங்களின் தொடா்ச்சியான செயல்முறையிலும் இந்த முன்மொழிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என சட்ட அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.