இது தொடா்பாக அதிமுக உறுப்பினா் எம். தனபால் பேசுகையில், மத்திய அரசு தற்போது செயல்படுத்தி வரும் பல்வேறு சமூக திட்டங்கள் அனைத்தும் 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வறுமை கோட்டுக்குக் கீழே உள்ளவா்களின் (பிபிஎல்) கணக்கெடுப்பின்படி நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இடைப்பட்ட காலத்தில் நாடு சமூகம், பொருளாதார சூழல்கள், மக்கள்தொகை பெருக்கம், அதிகரிக்கும் செலவினம், வேலைவாய்ப்பின்மை, வாழ்வாதார பாதுகாப்பின்மை போன்றவற்றால் நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளது. எனவே, புதிதாக கணக்கெடுப்பை நடத்தி உண்மையான வறியநிலை பயனாளிகளுக்கு திட்டப்பலன்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.