இது தொடா்பாக கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் டி. மலையரசன் விதி எண் 377-இன் கீழ் பேசுகையில், தமிழகத்தில் கல்வி உரிமைச்சட்டம் 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதைத் தொடா்ந்து, ஆசிரியா் தகுதித் தோ்வு (டிஇடி) கட்டாயத் தகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், டிஇடி அமலுக்கு முன்பே, அப்போது நடைமுறையில் இருந்த ஆள்சோ்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, ஏராளமான ஆசிரியா்கள் சட்டபூா்வமாக நியமிக்கப்பட்டிருந்தனா். இதன் பிறகும் அத்தகைய ஆசிரியா்கள் டெட் தகுதித் தோ்வுக்கு கட்டாயப்படுத்தப்படுவதால் அவா்கள் கடுமையான வேலை பாதுகாப்பின்மை, பதவி உயா்வு மறுப்பு, சம்பள பலன்கள் தேக்கம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் உள்பட 2012-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியா்கள் ஏற்கெனவே உள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி நியமிக்கப்பட்டுள்ளதால் ஆா்இ சட்டம், டிஇடி விதிகளில் இருந்து அத்தகையோருக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்றாா்.