புது தில்லி, செப்.14: குழந்தைகளிடம் பண்பாடு, கலாசாரத்தை வளர்ப்பதற்குப் பள்ளிகளில் நீதிபோதனை அவசியம் என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
புது தில்லிக்கு வருகை தந்துள்ள அவர், ராமகிருஷ்ணாபுரம் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் எதிரே உள்ள அருள்மிகு தேவி காமாட்சி அம்மன் கோயிலில் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.
"தினமணி' நிருபரிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:
இளைய தலைமுறையினரிடம் தேசத்தின் பண்பாடு, கலாசாரம், கலைகள் தொடர்பான விஷயங்களைப் பயிற்றுவிப்பதைப் பெரியவர்கள் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.
பண்பாட்டைப் பேணும் சமுதாயமுமே சிறந்த சமுதாயமாக இருக்க முடியும். குழந்தைகளிடம் தேசத்தின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை எடுத்துக் கூற வேண்டும்.
நாங்கள் சிறு வயதில் இருந்தபோது பள்ளிகளில் நன்னெறி கற்றுத் தரப்பட்டது. அதுபோன்ற விஷயங்கள்தான் இன்றைய தலைமுறையினரை சிறந்தவர்களாக உருவாக்க உதவிடும்.
காஞ்சிமடம் சார்பில் அறநெறிக் கதைகள், கருத்துகள் அடங்கிய நூல்கள் ஆங்கிலம், தமிழில் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
காஞ்சி மடத்தைத் தொடர்புகொண்டால் பள்ளிகளுக்கு அவற்றை இலவசமாக வழங்கத் தயாராக இருக்கிறோம்.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பள்ளிகளில் கீதை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதுபோன்ற அளவுக்கு இல்லாவிட்டாலும் நீதிபோதனையை பள்ளிகளில் அவசியம் பயிற்றுவிக்க வேண்டும். அவைதான் குழந்தைகளைப் பண்பட்டவர்களாக மாற்றும்.
மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கும் வகுப்புக் கலவரத் தடுப்புச் சட்ட முன்வடிவு நாட்டுக்கு ஆபத்தானது.
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தபோது பெரும்பான்மை, சிறுபான்மை என்று பார்க்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது அது போன்ற நிலை இல்லை. எல்லோரையும் சமத்துவமாகவே பார்க்க வேண்டும். நம்முடைய சமுதாயத்தில் பெரும்பான்மையோரில் ஏழைகள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கச் செய்வது அவசியம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

