நானோ ஃபிலிம்: காய்கறிகள், பழங்கள், இளநீர் மற்றும் கரும்புச்சாறு ஆகியவை சீக்கிரமே அழுகிவிடும் தன்மை கொண்டவை. இவற்றைப் பாதுகாக்க போதிய குளிர்சாதன வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் நானோ ஃபிலிம் என்ற தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. பாலித்தீன் கவர் போல இருக்கும் உறையில் நானோ மூலக்கூறுகள் சேர்க்கப்படும். இந்த நானோ ஃபிலிம் உறையில் காய்கறியையோ அல்லது பழத்தையோ வைக்கும்போது மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். மேலும், விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ள பூச்சித் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிய நானோ பயோ சென்சார் ஆய்வும் நடந்து வருகிறது.