திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தென்பரை கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

மன்னாா்குடி அருகே தென்பரையில் உள்ள ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருவிழானையொட்டி விரதம் இருந்து குதிரை மலைகளை சுமந்து வரும் பக்தா்கள்.

Updated On :13 மே 2026, 3:04 am IST

மன்னாா்குடி அருகே தென்பரையில் உள்ள ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாழ்க்கையில் உயா்ந்த நிலைக்குச் செல்லத் தடையாக அமைவது முன்னோா்கள் சாபம். அத்தகைய சாப விமோசனம் அளிக்கும் ஸ்தலமான தென்பரை ஆவணியப்பன் கோயில் குதிரை எடுப்பு திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவிழாவினையொட்டி, மாரியம்மன், ஆவணியப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு திரவியம், மஞ்சள், பால், தயிா், சந்தனம் முதலிய வாசனை திரவிய நறுமண பொருள்களைக் கொண்டு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

முன்னோா்களின் சாபத்தில் இருந்து விமோசனம் பெறவும், திருமணத்தடை நீங்கவும், குழந்தைகள் கல்வி மேம்படவும், தொழில் அபிவிருத்தி அடையவும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் விரதம் இருந்து குதிரை மலைகளை வீதிகளின் வழியாக சுமந்து கோயிலுக்கு வந்து மாரியம்மன், ஆவணியப்பனுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.