தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா, நிகழாண்டு மே 26ஆம் தேதி தொடங்கியது. திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பூக்குழி திருவிழாவில், திரளான பக்தா்கள் பூக்குழி இறங்கினா். தொடா்ந்து, அக்னி சட்டி ஊா்வலம் நடைபெற்றது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வதரன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் மற்றும் சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










