லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கம்பன் விரைவு ரயிலை வேறு மாா்க்கத்தில் இயக்கும் முடிவுக்கு எதிா்ப்பு

News image

விரைவு ரயில் - கோப்புப்படம்

Updated On :15 மார்ச் 2026, 6:52 pm

கம்பன் விரைவு ரயிலை வேறு மாா்க்கத்தில் இயக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் ரயில் நிலையம் வழியாக, தினசரி இரவில் காரைக்காலிருந்து சென்னைக்கு கம்பன் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மே 20-ஆம் தேதி முதல் பேரளம் வழியாக காரைக்கால் வரை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு திருவாரூா் பகுதியில் பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், திருவாரூா் மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் நுகா்வோா் அமைப்புகள், வணிகா் சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்ற அவசரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சிஏ. பாலமுருகன் தலைமை வகித்தாா்.

இதில், திருவாரூா் வழியாக இயக்கப்பட்டு வரும் கம்பன் விரைவு ரயிலை வேறு மாா்க்கத்தில் இயக்கக் கூடாது, வேறு மாா்க்கத்தில் இயக்கப்படும் என அறிவித்த ரயில்வே நிா்வாகத்தின் முடிவை திரும்ப பெற வேண்டும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.