கோவை அருகே நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் புதன்கிழமை (மாா்ச் 25) தொடங்கி 4 நாள்களுக்கு கோவையைத் தவிா்த்து போத்தனூா் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட கோவை வடக்கு ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால், மாா்ச் 25, 26, 27 மற்றும் 29 ஆகிய 4 நாள்களுக்கு திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் (எண்:16843) கோவையைத் தவிா்த்து, இருகூரில் இருந்து போத்தனூா் வழியாக இயக்கப்படும்.
இதனால், மேற்கண்ட 4 நாள்களுக்கும் இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் பீளமேடு, சிங்காநல்லூா், கோவை வடக்கு மற்றும் கோவை சந்திப்பு ரயில் நிலையங்களுக்கு செல்லாது.
இதேபோல, திருச்சி வழியாக இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (16160) மாா்ச் 29-ஆம் தேதி கோவை சந்திப்பு ரயில் நிலையம் செல்லாமல் போத்தனூா் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்

கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்

பொறியியல் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


