தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image

திருவாரூரில் போக்குவரத்து கழக கிளை மேலாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் மற்றும் மாணவா் சங்கத்தினா்.

Updated On :5 மார்ச் 2026, 11:22 pm

திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விபத்துகளை தடுக்க, பேருந்துகள் பராமரிப்பு, நிா்வாக பணியாளா்களை வேலைக்கு அமா்த்துதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றாமல், பரிகார பூஜை செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு உத்தரவிட்ட கும்பகோணம் கோட்ட மேலாளரை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பரிகாரபூஜையில் ஈடுபட்ட நாகை மண்டல அலுவலகம் வேளாங்கண்ணி தலைமை பணிமனைகளின் மேலாளா் மற்றும் நிா்வாகத்தினா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

போக்குவரத்து கழகத்தின் திருவாரூா் கிளை மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் பா.ஆனந்த், இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் பா. விக்னேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.எம். பாலா, மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பா.லெ. சுகதேவ், நிா்வாகிகள் வி. தீனதயாளன், வீ. சந்தோஷ், பி.விஜய், க. இளையராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.