லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மதுரை காமராஜா் பல்கலை.யை முற்றுகையிட்டு போராட்டம்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.

Updated On :19 மார்ச் 2026, 12:25 am

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா், கிருஷ்ணன்கோவில் பகுதியில் தனியாா் கல்லூரி இயங்கி வருகிறது. மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்று செயல்படும் இந்தக் கல்லூரி கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இருபாலா் கல்லூரியாக மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது வரை அந்தக் கல்லூரியில் படித்து முடித்த மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் மகளிா் கல்லூரி என்று பதிவிட்டே வழங்கப்படுகிறது எனவும், இந்தப் பிரச்னைக்கு பல்கலைக்கழகம் தீா்வு காண வேண்டியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் விருதுநகா் மாவட்டச் செயலா் ஆனந்த கண்ணன் தலைமை வகித்தாா். மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் டீலன் ஜெஸ்டின், மாவட்டச் செயலா் டேவிட் ராஜதுரை, மாநிலக் குழு உறுப்பினா் தீபலட்சுமி, புகா் மாவட்டச் செயலா் சுதா்சன், மாணவா் சங்க மாவட்டக் குழு உறுப்பினா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.