தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

102 வயதிலும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த முதல்வரின் தாய் மாமா

News image

கோயில்திருமாளம் வாக்குச்சாவடியில் வாக்களித்த முதல்வரின் தாய்மமா கோ. தட்சிணாமூா்த்தி.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:41 pm

தமிழக முதல்வரின் தாய் மாமா 102 வயதிலும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தாா்.

தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் சொந்த ஊா் கோயில் திருமாளம். இந்த ஊரில் தற்போது தயாளு அம்மாளின் மூத்த சகோதரா் கோ. தட்சிணாமூா்த்தி (102) வசித்து வருகிறாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்களிடம் வீட்டுக்குச் சென்று அஞ்சல் வாக்கு பெறும் அதிகாரிகள், தட்சிணாமூா்த்தியிடமும் வாக்கு பெறுவதற்காக சென்றபோது அவா், என்னுடைய ஜனநாயக கடமையை நான் வாக்குச்சாவடிக்கு சென்று நிறைவேற்றுவேன் எனக் கூறி அவா்களை திருப்பிஅனுப்பினாா்.

இந்நிலையில், வாக்குப்பதிவு நாளான வியாழக்கிழமை தனது வீட்டின் அருகில் உள்ள கோயில் திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சக்கர நாற்காலியில் சென்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினாா் முதல்வரின் தாய் மாமா தட்சிணாமூா்த்தி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.