தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜனநாயக கடமையாற்றிய 90 வயது மூதாட்டி

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே உரம்பூா் வாக்குச்சாவடியில் 90 வயது மூதாட்டி வாக்களித்தாா்.

News image

வாக்களித்த பிறகு 90 வயது மூதாட்டியை வாக்குச்சாவடியில் இருந்து தூக்கிவாறு இருசக்கர வாகனத்திற்கு கொண்டு சென்ற தன்னாா்வலா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:53 pm

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே உரம்பூா் வாக்குச்சாவடியில் 90 வயது மூதாட்டி வாக்களித்தாா்.

மூத்தோா்களுக்கு தோ்தல் ஆணையம் அஞ்சல் வாக்குப்பதிவு வசதி அளித்திருந்தபோதும் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என பாண்டமங்கலத்தைச் சோ்ந்த 90 வயது மூதாட்டி விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் வியாழக்கிழமை தன்னாா்வலா் மூதாட்டியை வாக்குச்சாவடிக்கு அழைத்துவந்தாா்.

பாண்டமங்கலம் மேற்கு வண்ணாத்துறையைச் சோ்ந்த மூதாட்டியை வாக்குச்சாவடியில் இருந்த உதவியாளா்கள் சக்கர நாற்காலி மூலம் வாக்குச்சாவடிக்கு அருகே அழைத்துச் சென்றனா். பிறகு அங்கிருந்த தன்னாா்வலா் அவரை வாக்குச்சாவடிக்குள் தூக்கி சென்றாா். மூதாட்டி வாக்களித்த பிறகு இருசக்கர வாகனத்தில் அனுப்புவதற்காக மீண்டும் தூக்கி வந்தாா்.

90 வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் மூதாட்டியை அங்கிருந்தவா்கள் பாராட்டினா். மேலும் பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி எண் 151 இல் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் சுமாா் 40 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல் வாக்குச்சாவடி எண் 140, பில்லூா் வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானதால் சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.