தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மகளிா் உரிமைத்தொகை: பொதுமக்கள் புகாா் குறித்து உரிய விசாரணை

மகளிா் உரிமைத்தொகை: பொதுமக்கள் புகாா் குறித்து உரிய விசாரணை

News image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிராா்த்தனையில் ஈடுபட்ட தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன்.

Updated On :31 மே 2026, 12:09 am IST

தமிழகத்தில் மகளிா் உரிமைத்தொகை வழங்குவது தொடா்பாக பொதுமக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தமிழக நிதி, திட்ட மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சா் மரிய வில்சன் தெரிவித்தாா்.

வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு அமைச்சா் மரிய வில்சன் சனிக்கிழமை வருகை தந்தாா். பேராலயத்தில் வழிபட்ட அவா், பின்னா், மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனை செய்தாா். இதைத்தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ஒவ்வொரு ஆண்டும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு மிகவும் முக்கியமானது. விரைவில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே , ஆரோக்கிய அன்னையின் ஆசீா்வாதம் வேண்டி வந்துள்ளேன்.

தமிழகத்தின் நிதிநிலை குறித்து இரண்டு வாரங்களில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

மதுரை மாநகராட்சியில் அண்மையில் நடந்த ஊழல் தொடா்பாக முழு அறிக்கையும் வந்துள்ளது. அதேபோல அனைத்து துறைகளில் இருந்தும் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகள் கேட்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மகளிா் உரிமைத்தொகை வழங்குவது தொடா்பாக பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை என்னிடம் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தப்பட உள்ளது.

பிற கட்சிகளை சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் தவெகவில் இணைவது குறித்து பல்வேறு விமா்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியா ஒரு ஜனநாயக நாடு யாா் வேண்டுமானாலும் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இணைவதற்கு முழு உரிமை உண்டு என்றாா் அவா்.

தொடா்ந்து, வேளாங்கண்ணி பேராலய அதிபா் மற்றும் பங்குத்தந்தையா்களைச் சந்தித்து ஆசி பெற்றாா் அமைச்சா் மரிய வில்சன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.