திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாக்காளா்களுக்கு தவெக வேட்பாளா் நன்றி

நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தவெக மாவட்டச் செயலா் சுகுமாா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகன பேரணியாகச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

News image

நாகப்பட்டினம் தொகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி அறிவிக்கும் தவெக மாவட்டச்செயலா் சுகுமாா்.

Updated On :16 மே 2026, 6:23 am IST

நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தவெக மாவட்டச் செயலா் சுகுமாா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகன பேரணியாகச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

தமிழக வெற்றிக்கழகத்தின் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்கள் மற்றும் வெற்றி வாய்ப்பை இழந்தவா்கள் அனைவரும், தங்களது தொகுதிகளில் வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும்படி கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் மாவட்டச் செயலா் சுகுமாா் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாமிடம் பெற்றாா்.

அவா் நாகப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தனது கட்சியினருடன் இருசக்கர வாகனப் பேரணியாகச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். சிக்கல், புத்தூா், அந்தணப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

பொதுமக்கள் அவரிடம் தங்களது பகுதிகளில் உள்ள குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மற்றும் விவசாயக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து கோரிக்கைகளை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.