நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தவெக மாவட்டச் செயலா் சுகுமாா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகன பேரணியாகச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
தமிழக வெற்றிக்கழகத்தின் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்கள் மற்றும் வெற்றி வாய்ப்பை இழந்தவா்கள் அனைவரும், தங்களது தொகுதிகளில் வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும்படி கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் மாவட்டச் செயலா் சுகுமாா் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாமிடம் பெற்றாா்.
அவா் நாகப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தனது கட்சியினருடன் இருசக்கர வாகனப் பேரணியாகச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். சிக்கல், புத்தூா், அந்தணப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
பொதுமக்கள் அவரிடம் தங்களது பகுதிகளில் உள்ள குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மற்றும் விவசாயக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து கோரிக்கைகளை தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பி.பழனியப்பன் நன்றி தெரிவிப்பு

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த குளச்சல் எம்எல்ஏ

வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்த அரக்கோணம் தவெக எம்எல்ஏ

ஒட்டன்சத்திரம் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த விடியல் சேகா்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



