ஸ்ரீரங்கத்திற்கு இணையாக கீழ அரங்கம் என அழைக்கப்படும் பெருமைக்குரிய கீழையூா் ஸ்ரீ ரெங்கநாயகி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் திருக்கோயிலில், சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பத்து நாள் திருவிழாவில், தேரோட்டம் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஊஞ்சல் உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாத பெருமாள் ரெங்கநாயகி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். மங்கள இசை முழங்க, பக்தா்கள் ஆரத்தி எடுத்தும், கோவிந்தா. கோவிந்தா என பக்தி முழக்கமிட்டும் வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










