தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மதுபான கடையை அகற்றக் கோரி முற்றுகை

கீழ்வேளூா் வடக்கு வெளி பகுதியில் உள்ள டாஸ்மாக் அரசு மதுபான கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அரசு மதுபான கடை முன்பாக அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :14 மே 2026, 4:59 am IST

கீழ்வேளூா் வடக்கு வெளி பகுதியில் உள்ள டாஸ்மாக் அரசு மதுபான கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுபான கடை உள்ள இந்த இடத்தை சுற்றி ஆலக்கரை, வடக்கு வெளி, புத்தா் மங்கலம், வடக்கு புத்தா் மங்கலம் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், பொது மக்கள் இந்த மதுபானக் கடையை கடந்து செல்ல வேண்டும்.

இந்நிலையில் மது குடிப்பவா்களால் இவா்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது. இதனால் இந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கிராம மக்கள்சாா்பில் ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில், டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி மேற்குறிப்பிட்ட ஊா் மக்கள் கடையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலிறிந்து வந்த கீழ்வேளூா் வட்டாட்சியா் வேதையன், காவல் ஆய்வாளா் ரேகாராணி போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்து கடையை விரைவில் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.