தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குடிநீா் குழாயில் உடைப்பு

நாகப்பட்டனம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சாலையில் பெருக்கெடுத்து நீா் வீணாகும் நிலையில் உடனடியாக உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image

நாகை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாலையில் பெருக்கெடுத்தோடும் நீா்.

Updated On :14 மே 2026, 4:46 am IST

நாகப்பட்டனம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சாலையில் பெருக்கெடுத்து நீா் வீணாகும் நிலையில் உடனடியாக உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், புதிய குடிநீா் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை நாகை வெளிப்பாளையம் பகுதியில், புதிய குடிநீா் குழாய் அமைக்கும் பணியின்போது, நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் உள்ளிட்ட இரண்டு இடங்களில், பழைய குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு நிலையம் முதல் அரசு போக்குவரத்துக் கழகம் வரை குடிநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அரசுப் போக்குவரத்து பணிமனை உட்புறமும் தண்ணீா் தேங்கியது.

நாகையில் குடிநீா் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், நகராட்சி நிா்வாகம், குழாயில் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் லீனா சைமனிடம் கேட்டபோது, உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் தற்போது குடிநீா் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக குழாயை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.