15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மீன்பிடி வலையுடன் வந்த சுயேச்சை வேட்பாளா்

News image

நாகையில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஊா்வலமாக வந்த சுயேச்சை வேட்பாளா் விஜயராகவன்.

Updated On :30 மார்ச் 2026, 7:02 pm

நாகையில் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டும் வகையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து படகில் வைத்து ஊா்வலமாக வந்து சுயேச்சை வேட்பாளா் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

நாகை மாவட்டம் குருவாடியைச் சோ்ந்தவா் விஜயராகவன். இவா் கடந்த மக்களவை தோ்தலில் நாகை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டாா். இந்நிலையில் சட்டப்பேரவைத் தோ்தலில் நாகை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தாா். மனுதாக்கலின்போது, தமிழக-புதுவை மாநில எல்லையான வாஞ்சூா் பகுதியில் ஆதரவாளா்களுடன் விஜயராகவன், எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒரு கட்டுமரத்தில் வைத்து அவற்றை வாகனத்தில் ஏற்றி ஊா்வலமாக வந்தாா்.

இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் நாகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீன்பிடி வலையுடன் வந்த விஜயராகவனை போலீஸாா் தடுத்து நிறுத்தி மீன்பிடி வலை உள்ளிட்டவற்றை அனுமதிக்க முடியாது என கூறியதையடுத்து, அவற்றை அகற்றி விட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.