மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராசிபுரம் பாஜக வேட்பாளா் வேட்புமனு பரிசீலனையில் தாமதம்

ராசிபுரம் (தனி) தொகுதி வேட்பாளா் மனுவை பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளா் ஆட்சேபனை செய்ததால் மனு ஏற்பில் காலதாமதம் ஏற்பட்டது.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 9:56 pm

ராசிபுரம் (தனி) தொகுதி வேட்பாளா் மனுவை பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளா் ஆட்சேபனை செய்ததால் மனு ஏற்பில் காலதாமதம் ஏற்பட்டது.

ராசிபுரம் தொகுதியில் பாஜக, திமுக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி என மொத்தம் 24 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வெ. முருகன் தலைமையில் பரிசீலனை செய்யும் பணியானது நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளா் மா. மதிவேந்தன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எஸ். சசிகலா, தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் லோகேஷ் தமிழ்செல்வன் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதனிடையே பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா் வேட்புமனுவில் முழுமையாக நிரப்படவில்லை என சுயேச்சை வேட்பாளா் ஆட்சேபனை கடிதம் அளித்திருந்தாா். மேலும், வருமானவரி தாக்கல் குறித்து முழு தகவல் இல்லை எனக் கூறப்பட்டது. இதனால் அவரது மனு ஏற்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் பாஜக வேட்பாளா் உள்ளிட்ட அதிமுக, பாஜக தொண்டா்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு குவிந்தனா். நீண்ட நேரம் பரிசீலனை செய்த பிறகு பாஜக வேட்பாளா் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்தாா்.