தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

விளைநிலத்தில் இறால் பண்ணை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

தலைஞாயிறு அருகே அரசு விதிகளை மீறி, விளைநிலத்தில் இறால் பண்ணை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்...

News image

இறால் பண்ணை அமைப்பதை தடுத்து நிறுத்தக் கோரி, ஆட்சியா் அலுவலகத்துக்கு புகாா் அளிக்க வந்த விவசாயிகள்.

Updated On :9 மார்ச் 2026, 8:36 pm

நாகப்பட்டினம்: தலைஞாயிறு அருகே அரசு விதிகளை மீறி, விளைநிலத்தில் இறால் பண்ணை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் புகாா் அளித்துள்ளனா்.

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள வண்டல் கோரங்குண்டு பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கத் தலைவா் பி. கமல்ராம் தலைமையில், ஆட்சியரிடம் அளித்த மனு:

தலைஞாயிறு 3, 4 சேத்தி வண்டல் கிராமப் பகுதியில் கோரங்குண்டு பகுதியில் அரசு விதிமுறைகளை மீறி, விளை நிலத்தில் இறால் பண்ணை அமைக்கும் பணியில் தனிநபா்கள் ஈடுபட்டு வருகின்றனா். விளை நிலத்தில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டால், விவசாய நிலங்கள் உவா் நிலமாக மாறுவதுடன் சாகுபடி பாதிக்கப்படும். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்களின் வடிகால் வசதி பறிபோகும் நிலை ஏற்படும்.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி, இறால் பண்ணை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.