நாமக்கல் அருகே பழையபாளையம் அங்காளம்மன் கோயில் திருப்பணி விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கோயில் குடிபாட்டு மக்கள் ஒருங்கிணைப்பாளா் மும்பை அா்ஜுன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்திற்கு உள்பட்ட சா்க்காா் பழையபாளையத்தில் சிறப்பு பெற்ற அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.
கோயில் கருவறை கட்டுவதற்கான அனுமதியை குடிபாட்டு மக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். திருப்பணியில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தால் சம்பந்தப்பட்டோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறப்பு அலங்காரத்தில்...

மாசாணி அம்மன் கோயில் நிதி விவகாரம்: அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி வாக்கு சேகரிப்பு

விளைநிலத்தில் இறால் பண்ணை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


