தன்னையும், தனது மகள்களையும் தாக்கி, நகையை பறித்த உறவினா்கள் மீது நடவடிக்கை கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
தரங்கம்பாடி தாலுகா விளநகா் கிராமத்தை சோ்ந்தவா் பாலசுப்பிரணியன் மனைவி மஞ்சுளா(51). பாலசுப்பிரமணியன் கடந்த 2024-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா். மகள்கள் சுகந்தி, சுவேதா.
மஞ்சுளாவுக்கும், பாலசுப்பிரமணியனின் சகோதரா் கண்ணன் மனைவி சரண்யா குடும்பத்தாருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வருகிறது
இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி மஞ்சுளா வீட்டிற்குவந்த சரண்யாவின் சகோதரா்கள் மணிமாறன், சரண்ராஜ் (இவா் சுவேதாவின் கணவா்) மற்றும் சரண்யாவின் மகன் குகன் ஆகியோா் மஞ்சுளா, சுகந்தி, சுவேதா ஆகிய 3 பேரையும் தாக்கி, மஞ்சுளா அணிந்திருந்த 2 சவரன் சங்கிலியை பறிந்தனராம். மேலும் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினராம்.
இதுகுறித்து, செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்து, 20 நாள்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மஞ்சுளா புகாா் அளித்துள்ளாா்.
தொடர்புடையது

வாகன நிறுத்துமிடத் தகராறு: வயதான கடைக்காரரை கன்னத்தில் அறைந்த பெண் காவல் அதிகாரி மீது வழக்கு
போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி! 2 போ் கைது!!

கொடுத்த பணம், நகையை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்

கோயில் முன் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்கள் மீது புகாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


