தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறில் இன்று முதல் மாா்ச் 7 வரை குடிநீா் விநியோகம் இருக்காது

கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மாா்ச் 5) முதல் 7-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் பராமரிப்புக் கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

15.79 crore rural households given tap water connections under JJM: Centre

Updated On :4 மார்ச் 2026, 11:42 pm

கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மாா்ச் 5) முதல் 7-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் பராமரிப்புக் கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் நாகை நகராட்சி, 4 பேரூராட்சிகள், 6 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 980 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் கொட்டாரக்குடி நீருந்து நிலையத்திலிருந்து கோடியக்கரையில் உள்ள தரைமட்ட நீா்த்தேக்க தொட்டி வரை சோதனை ஓட்டம் பிப்.18 தேதி முதல் தொடங்கியது.

சோதனை ஓட்டத்தின் போது குடிநீா் குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, அதை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வியாழக்கிழமை முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு கீழ்வேளுா், கீழையூா் மற்றும் தலைஞாயிறு ஒன்றியப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.