கீழையூா் அருகே ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 97 ஆயிரம் ரொக்கத்தை பறக்கும் படை குழுவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கீழையூா் அருகே மேலப்பிடாகை கடைத் தெருவில் பறக்கும்படை அதிகாரி மாரிராஜ் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.
அப்போது அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தபோது, தலைஞாயிறு மூன்றாம் சேத்தி, பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த முகம்மது ஹாலிது என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி வெளிநாட்டு பணம் (இந்திய மதிப்பு) ரூ.97 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது.
ரொக்கத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

திருப்பத்தூா் அருகே ரூ. 5.47 கோடி பறிமுதல்

கீழ்வேளூா்: ரூ.1.17 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் பறிமுதல்

அரிசி வியாபாரியிடம் ரூ.59,400 பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


