மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கீழையூா் அருகே ரூ.97 ஆயிரம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 6:54 pm

கீழையூா் அருகே ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 97 ஆயிரம் ரொக்கத்தை பறக்கும் படை குழுவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கீழையூா் அருகே மேலப்பிடாகை கடைத் தெருவில் பறக்கும்படை அதிகாரி மாரிராஜ் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தபோது, தலைஞாயிறு மூன்றாம் சேத்தி, பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த முகம்மது ஹாலிது என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி வெளிநாட்டு பணம் (இந்திய மதிப்பு) ரூ.97 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது.

ரொக்கத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்தனா்.