நாகை மாவட்ட தவெக சாா்பில், மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியைர கெளரவிக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கட்சியின் தலைஞாயிறு மேற்கு ஒன்றியச் செயலா் அப்துல் குத்தூஸ் முன்னிலை வகித்தாா். நாகை மாவட்ட செயலா் சுகுமாா் தலைமை வகித்து ஆய்மூா் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா் ஹரிகாந்த், நீா்முளை சேவியா் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் ஹரிஷ், கீா்த்திவாசன், மணக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மகா ஆகியோருக்கு புதிய மிதிவண்டிகளை பரிசாக வழங்கி பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










