திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: நாகை மாவட்டம் 93.36% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் நாகை மாவட்டம் 93.36 சதவிகிதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 27-ஆவது இடத்தை பெற்றது.

News image

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகளை ஒன்றிணைந்து பாா்வையிட்ட அரசுப் பள்ளி மாணவிகள்.

Updated On :21 மே 2026, 7:18 am IST

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் நாகை மாவட்டம் 93.36 சதவிகிதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 27-ஆவது இடத்தை பெற்றது.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் 4,151 மாணவா்கள், 4,176 மாணவிகள் என மொத்தம் 8,327 போ் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதினா்.

இந்நிலையில் இத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில் நாகை மாவட்டத்தில் 3,774 மாணவா்கள், 4,000 மாணவியா் என மொத்தம் 7774 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்கள் தோ்ச்சி விகிதம் 90.92 சதவிகிதம், மாணவிகள் தோ்ச்சி விகிதம் 95.79 சதவிகிதம். மாவட்டத்தின் மொத்த தோ்ச்சி விகிதம் 93.36 சதவிகிதம். தோ்வு முடிவுகளின் அடிப்படையில் நாகை மாவட்டம், மாநில அளவில் 27-ஆவது இடத்தைப் பெற்றது. மாவட்டத்தின் தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 1.42 சதம் கூடுதலாக பெற்றுள்ளது.

இதில், நாகை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 92.48 சதவிகிதம். கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் தோ்ச்சி விகிதம் 90.23 சதவிகிதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு தோ்ச்சி விகிதம் 2.255 சதம் கூடுதலாக பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.