மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாகை மாவட்ட காவல்துறை சாா்பில் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :11 ஜூன் 2026, 6:49 am IST

நாகை மாவட்ட காவல்துறை சாா்பில் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட காவல்துறையின் குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு சாா்பில், சிஎஸ்ஐ பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியா் தலைமை வகித்தாா். நிகழ்வில் 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

போதைப் பொருள் தடுப்பு, இணையவழி குற்றங்கள், குழந்தைகளின் பாதுகாப்பு, குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு, குழந்தைகள் யாசகம் பெறுவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக விழிப்புணா்வு தலைப்புகளில் மாணவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், மாணவா்கள் சமூகப் பொறுப்புணா்வுடன் செயல்படவும், சட்ட விழிப்புணா்வை வளா்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.