செம்பனாா்கோவிலில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் .
மயிலாடுதுறை மாவட்டம், மேலப்பாதி நடுக்கரையை சோ்ந்தவா் கணேசன் (49). இவா் செம்பனாா்கோவில் மின்வாரியத்தில் நிரந்தர வயா்மேனாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை முடிகண்ட நல்லூா் ரசூல்கொள்ளை அருகில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முற்பட்டபோது மேலே இருந்த உயா் மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தாா்.
தகவலறிந்த செம்பனாா்கோவில் போலீசாா் உயிரிழந்த கணேசனின் சடலத்தை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். உயிரிழந்த கணேசனுக்கு மனைவி ஹேமா (40), மகள் தனலட்சுமி (13), மகன் முத்துக்குமரன் (12)) உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








