/

பொறையாா் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில், மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
மாணவிக்கு மடிக்கணினி வழங்கும் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் உள்ளிட்டோா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில், மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜான்சன் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவா் சுகுணசங்கரி, துணைத் தலைவா் பொன்.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேதியியல் துறை தலைவா் பேராசிரியா் விக்டா் பாண்டியன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் கலந்து கொண்டு 423 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினாா்.

இந்நிகழ்வில், திமுக ஒன்றியச் செயலாளா் அமுா்த விஜயகுமாா், நகரச் செயலாளா் முத்துராஜா, கல்லூரி பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேராசிரியா் ராஜன் நன்றி கூறினாா்.

Story image