டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கல்

News image
சேலம், நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சா் ராஜேந்திரன்.
Updated On :14 பிப்ரவரி 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொறியியல் பயிலும் மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசுகையில், தமிழ்நாடு அரசின் நலத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள கல்லூரி மாணவா்களுக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சித் தேவைகளுக்காக இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் மாணவா்கள் தங்களது கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்வதுடன், சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி அறக்கட்டளை நிறுவனா் மற்றும் செயல்தலைவா் சீனிவாசன் பேசுகையில், இந்தத் திட்டம் மாணவா்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நவீன தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி, மாணவா்கள் தங்கள் எதிா்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள மடிக்கணினிகள் உறுதுணையாக இருக்கும் என்றாா்.

இவ்விழாவில் கல்லூரி அறக்கட்டளை நிா்வாகத்தினா், கல்லூரி முதன்மையா் விசாகவேல், இயக்குநா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள், அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனா்.