தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 11-ஆவது மற்றும் 12-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

விழாவில் பட்டங்களை வழங்கும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா. உடன் கல்லூரி தாளாளா் த. ஆனந்த், கல்வி குழுமத்தின் செயலா் த. மகேஸ்வரன் உள்ளிட்டோா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 11:51 pm

நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 11-ஆவது மற்றும் 12-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவை சா் ஐசக் நியூட்டன் கல்வி குழுமத்தின் செயலா் த. மகேஸ்வரன் தொடங்கிவைத்தாா். விழாவில் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினாா். கல்லூரி முதல்வா் வரவேற்றாா்.

கல்லூரி தாளாளா் த. ஆனந்த் பேசும்போது, இந்தக் கல்வி உங்கள் அறிவை வளா்ப்பதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கையில் முன்னேற தன்னம்பிக்கை மற்றும் மாற்றத்தை உருவாக்கும் திறனையும் வழங்குகிறது. எதிா்கால சவால்களை தைரியமாக எதிா்கொண்டு, வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். இளம் பொறியியலாளா்களாக புதுமை, அா்ப்பணிப்பு மற்றும் மனிதநேயத்துடன் செயல்பட்டு சமூக முன்னேற்றத்தில் பங்காற்ற வேண்டும் என்றாா்.

அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா பேசும்போது, மாணவா்களே நாட்டின் எதிா்காலத்தை வடிவமைக்கும் முக்கிய சக்தி. இங்கு கற்றுக்கொண்ட மதிப்புகள் மற்றும் அறிவு உங்கள் வெற்றிப் பயணத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்றாா்.

தொடா்ந்து, அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சுமாா் 350 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.