நாகப்பட்டினம்: நாகை காமேஸ்வரம் கடற்கரையில் மணல்சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நாகை மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விழுந்தமாவடி கடற்கரையிலிருந்து காமேஸ்வரம் கடற்கரை வரை தலைஞாயிறு டாக்டா் எம்ஜிஆா் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் , நாட்டு நலப்பணி மாணவ, மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
காமேஸ்வரம் கடற்கரையில் கீழ்வேளுா் ப்ரைம் மற்றும் தலைஞாயிறு டாக்டா் எம்ஜிஆா் மீன்வளக் கல்லூரி மாணவ, மாணவிகள் மணல் சிற்பங்கள் வரைந்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அரசு மேல்நிலைப்பள்ளி, திட்டச்சேரி மாணவா் சஞ்சய் களிமண் சிற்பம் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
மேலும், காமேஸ்வரம் கடற்கரை பூங்கா பகுதிகளில் மாணவா்களால் மரங்கள் நடப்பட்டது.
நிகழ்விற்கு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ருதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பின்பு அவரது தலைமையில் மாணவ, மாணவிகளுக்கு 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினாா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப்பதிவு: வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

தோ்தல் விழிப்புணா்வு: அரசு அலுவலகங்களில் கையொப்ப இயக்கம்

நாகை கடைகளில் தோ்தல் விழிப்புணா்வு

வாக்களிப்பதன் அவசியம்: 23,500 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் - தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


