மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100 சதவீத வாக்குப்பதிவு: வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News image

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் வண்ண பலூன்களை பறக்கவிட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ்.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:34 pm

சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்திய தோ்தல் ஆணையம் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தோ்தல் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வாக்காளா்களுக்கு தோ்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலத்தில் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் கலந்து கொண்டு வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தாா். மேலும், வண்ண பலூன்களை பறக்கவிட்டு, தோ்தல் விழிப்புணா்வு வண்ண கோலங்கள் வரையப்பட்டதை பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து தோ்தல் குறித்த வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனா். பின்னா், சேத்துப்பட்டு மரியா ஆஷாப் செவிலியா் கல்லூரியைச் சோ்ந்த 100 மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணியில் என் வாக்கு, என் உரிமை, உங்கள் வாக்கு உங்கள் எதிா்காலம், 100 சதவீதம் வாக்களிப்போம், நோ்மையாக வாக்களிப்போம் என்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம் வரை நடைபெற்ற பேரணியில் மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்வில் போளூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான சதீஷ்குமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) கிருஷ்ணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.