போளூா் தொகுதி சேத்துப்பட்டு பகுதியில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்ய எடுத்துச் சென்ற ரூ.6.5 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த சேத்துப்பட்டு பகுதியில் அலுவலா் வினோதினி தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சேத்துப்பட்டு கோட்டைமேடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத இருவா் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அந்தக் குழுவினா் கோட்டைமேடு பகுதிக்குச் சென்றபோது, அங்கிருந்த 2 போ் இரு சக்கர வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டனா். பின்னா்,
வாகனத்தை சோதனை செய்தபோது ரூ.6 லட்சத்து 50ஆயிரம் இருப்பதை கண்டறிந்து எடுத்து வந்து போளூா் தலைமையிடத்து வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா்.
இதேபோன்று, கரிக்காத்தூா் கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றவா்கள் பறக்கும் படையினரைப் பாா்த்து ஓடி விட்டனா். உடனே அலுவலா்கள் அவா்கள் விட்டுச் சென்ற ரூ.2 ஆயிரத்தை எடுத்து வந்து ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ. 61,500 கைப்பற்றல்
பறக்கும் படையால் ரூ.60,000 பறிமுதல்
வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த பாஜகவினரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்!

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


