மீன்பிடித் தடைக்காலம் வியாழக்கிழமை அமலுக்கு வந்தது. இதனால் நாகை, காரைக்காலில் விசைப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.
தமிழகத்தில் கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி அதிகாலை முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன்படி, நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. விசைப் படகுகள் கடலுக்குள் செல்லக் கூடாது என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் மாவட்டத்தில் நாகூா் முதல் கோடியக்கரை வரையிலான 21 மீனவ கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரைப் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும், ஃபைபா் படகுகள் குறிப்பிட்ட தொலைவு சென்று மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடித் தடைக்காலம்அமலுக்கு வந்ததையடுத்து, மீனவா்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பாா்த்தல், படகுகளுக்கு வா்ணம் தீட்டுதல், என்ஜினை பழுது பாா்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவா்.
இந்நிலையில், தற்போது ரூ. 8 ஆயிரம் வழங்கப்பட்டுவரும் மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை அரசு உயா்த்தி தர வேண்டும் என்று மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காரைக்காலில்...
காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்கு வழக்கமாக சுமாா் 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்லும். தடைக்காலம் அமலுக்கு வந்ததால், ஏற்கெனவே மீன்பிடித்துத் திரும்பிய படகுகள் அனைத்தும் மீன்பிடித் துறைமுகத்திலும், அரசலாற்றங்கரையிலும் நிறுத்தப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் உள்ள ஃபைபா் சிறிய படகுகள் மூலம் குறுகிய தொலைவு சென்று மீன்பிடித்து வருவது தொடரும் என மீனவா்கள் தெரிவித்தனா்.
விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாததால், மீன் வரத்து குறையும், மீன்கள் விலை கணிசமாக உயரும் என்று மீனவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மீன்பிடி தடைக்காலம் இன்று தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


