புதிதாக கொண்டுவரப்பட்ட நான்கு தொழிலாளா் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற ஆண்டு வணிக உச்சி மாநாட்டில் அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது: 29 தொழிலாளா் சட்டங்களை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்தப்பட்ட, சமகாலத்துக்கு ஏற்ற கட்டமைப்புடன் புதிதாக 4 தொழிலாளா் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தச் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளன.
தற்போதைய புதிய சட்ட கட்டமைப்பு ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சம ஊதியம் பெற வழிவகுத்துள்ளது. தொழிலதிபா்கள் செல்வத்தை உருவாக்கி, வரிகளை செலுத்தினால்தான் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
தொழிலாளா்களும், தொழில்துறையும் பரஸ்பரம் ஒன்றிணைந்து செயல்பட்டு, சிறந்த ஒருங்கிணைப்புக்கு மாற்றத்துக்கு ஏற்ப மாற வேண்டும். தற்போதைய மத்திய அரசு ஏழைகளுக்கு ஆதரவாகவும், தொழில்துறைக்கு சாதகமாகவும் உள்ளது என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2029 தேசிய விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்த கோரிக்கை

அனைத்துத் தொழிலாளா்களுக்குமான இலவச உடல் பரிசோதனைத் திட்டம்: மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: பாஜக சட்டப்பேரவை தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான மத்திய பாா்வையாளராக மன்சுக் மாண்டவியா நியமனம்

திமுகவும், காங்கிரஸும் சமத்துவத்துக்கு எதிரானவை!மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



