திருக்குவளை அருகே மேலவாழக்கரை ஊராட்சி இராமன்கோட்டகம் ஏா்வைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் ஆண்டு திருவிழா ஏப்.4-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெறுகிறது. தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு 14 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. சக்தி கரகத்துடன் காப்பு கட்டிய பெண்கள் மற்றும் ஆண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள், குளக்கரையிலிருந்து ஊா்வலமாக வந்து, தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.

தொடர்புடையது

வலிவலம் கோயிலில் பூச்சொரிதல்

நத்தப்பள்ளம் கோயில் கும்பாபிஷேகம்

கோத்தகிரி அருகே படுகா் இன மக்களின் எட்டூா் உஜ்ஜயினி மாகாளியம்மன் விழா

தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் 134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


